தேவையான பொருட்கள்
1• உளுந்து - 250g
2• சின்ன வெங்காயம் - 50g
3• பச்சை மிளகாய் - 5-6
4• கறி வேப்பிலை - தேவையான அளவு
5• மிளகு - 1 மே.க
6• உப்பு - தேவையானளவு
7• எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை
* முதலில் உளுந்தை 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
* பின்னர் அதை கழுவி மிக்ஸியில் இட்டு கெட்டியாகவும் மையாகவும் அரைக்கவும்.
* அரைக்கும் போது சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து அரைக்கவும்.
* மாவில் சிறிதளவை எடுத்து தண்ணீரில் போட்டால் அது மிதக்கும். இதுவே சரியான பதம்.
* இப்பொழுது அரைத்த மாவினை ஒரு பாத்திரத்தில் போடவும்.
* அதன் பின்னர் பொடியாக வெட்டிய வெங்காயம், பச்சை மிளகாய், கறி வேப்பிலை, இடித்த மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
* அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய விடவும்.
* தண்ணீரில் கையை நனைத்து சிறிதளவு மாவை கையில் எடுத்து தட்டி நடுவில் துளை இட்டு எண்ணெயில் போடவும்.
* ஒரு பக்கம் வெந்ததும் மற்ற பக்கம் திருப்பி வேக விடவும்.
* எண்ணெயில் குமிளிகள் அடங்கியதும் வடையை எடுத்து விடவும்.
*சுவையான மொறு மொறு உளுந்து வடை Ready 😊
Post a Comment